உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். .
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது.
ஜாமின் வழங்கக்கோரி செந்தில் பாலாரிஜ தாக்கல் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,
இதனையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்ட்டிருந்த செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்பட்டார். சிறை வெளியே காத்திருந்த திமுகவினர் அவரை வரவேற்று அழைத்து சென்றனர்