ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்தது.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர், புடிமடக்க கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சமையல் செய்துகொண்டிருந்தபோது சிலிண்டரில் வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் படகு முழுவதும் தீ மளமளவென பரவியதையடுத்து மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.