தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் மலை பகுதியில் கனிம வளங்கள் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கதிரேசன் மலை அடிவாரத்தில் மணியாச்சி, மந்தித்தோப்பு உள்ளிட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அண்மைகாலமாக அங்கு ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கட்டப்படுவதாகவும், மலை குன்றுகளில் இருந்து சரளை மண்,கற்கள் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.