காலாண்டு விடுமுறையில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், மாணவிகள் தவறாது பள்ளிக்கு வர வேண்டும் என ஆசிரியர்கள் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.