சேலம் மாவட்டத்தில் 18 தலைமை காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தீவட்டிபட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மாமூல் வாங்கிக்கொண்டு போதை பொருள் கடத்தலுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 18 தலைமை காவலர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.