ஓர் அழகிய ரயில் பயணம் : பட்டியல் வெளியிட்ட ரயில்வே அமைச்சர் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓர் அழகிய ரயில் பயணம் : பட்டியல் வெளியிட்ட ரயில்வே அமைச்சர் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 1, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில் பயணம் பிடிக்காது என்று யார்தான் சொல்வார்கள்.  அழகான மற்றும் அமைதியான பயணம் என்றால் எப்போதுமே ரயில் பயணம் தான். இந்திய ரயில்வே நவீனமாகி வரும் நிலையில், மகிழ்ச்சியான ரயில் பயணங்களுக்கான ஒரு பட்டியலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி வெளியிட்டிருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இரயில் பயணத்தைத் தான் விரும்புகிறார்கள். நண்பர்களுடன்,குடும்பத்துடன், என்றில்லாமல் தனியாக சென்றாலும் இரயில் பயண அனுபவம் சுகமானதே.

இந்தியாவின் இரயில்வே துறை, உலகிலேயே மூன்றாவது பெரிய இரயில்வே அமைப்பாகும். இந்தியாவில் 60000 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட இரயில்பாதைகள் உள்ளன. மேலும் சுமார் 7500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இந்தியாவில், சுமார் 2 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்திய ரயில்வே, மலைகள் நிறைந்த பகுதிகளுக்கு குறுகிய ரயில்களை இயக்குகிறது. சுரங்கப் பாதைகள்,மலைப் பாலங்கள் மற்றும் வளைவுகள் என இயற்கை காட்சிகளை ரசித்தபடியே பயணிப்பது ஒரு இனிய அனுபவமாகும்.

இந்நிலையில் தான், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பனி நிறைந்த பள்ளத்தாக்குகள் முதல் பரந்த கடற்பகுதிகள் வரை இயற்கை அழகூட்டும் ரயில்வே பயணத்துக்கான ஒரு பட்டியலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஜம்மு & காஷ்மீரில், பனிஹால் முதல் பாத்காம் வரையிலான பனி படர்ந்த பள்ளத்தாக்கை ஒரு அழகிய காட்சியாக விவரித்துள்ள அஷ்வினி வைஷ்ணவ், இந்த ரயில் பயணம் பெரும்பாலும் விசித்திரக் கதை சவாரி போல் உள்ளது என்றும், பயணம் முழுவதும் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் காண முடிகிறது என்றும் கூறியிருக்கிறார்.

கோவாவில், சங்கேம் தாலுகாவில் அமைந்துள்ள இயற்கையின் அற்புதமான துத்சாகர் நீர்வீழ்ச்சியைக் கண்டு களிக்கும் வகையிலான ரயில் பயணம், சிறந்த அனுபவமாக அமைகிறது என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கல்காவிலிருந்து சிம்லா வரை மலைப்பாதையில் செல்லும் இரயில் பாதை, 800 பாலங்களை உள்ளடக்கியதாகும். இந்த இரயில் பாதை, குறுக்குவெட்டாக, 96-கிலோமீட்டர் செங்குத்தான பாதையாகும். இதற்காகவே கின்னஸ் புத்தகத்தில் இந்த இரயில் பாதை இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிக அழகிய மலை ரயில் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த இரயில் பயணத்தையும் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக, நமோ பாரத் ரேபிட் ரயில் மூலம், தார் பாலைவனத்தின் துடிப்பான சாயல்கள் மற்றும் ரானின் வெள்ளை மணலை இரசிக்கலாம் என்று, குஜராத்தின் கட்ச் இரயில் பயணத்தை அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

1908 இல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீலகிரி மலை ரயில், உள்ளூர் மக்களால் ‘பொம்மை ரயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரயில் 115 ஆண்டுகள் பழமையான ரயில் ஆகும். இந்த இரயில் 2005 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்தையும் பெற்றுள்ளது. 46 கிலோமீட்டர் தூரம் ஓடும் இந்த இரயில் பாதை, மேட்டுப்பாளையத்தில் உள்ள சமவெளிகளை குன்னூர் மலைப்பகுதிகளுடன் இணைக்கின்றது.

கேரளாவில், கடலோர நகரமான திருவனந்தபுரத்தின் அமைதியான கடற்கரைகள் மற்றும் தென்னந்தோப்புகள் வழியாக ஒரு அழகிய ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

மலைகள் மற்றும் பசுமையான பசுமையின் கம்பீரமான அழகைக் கடந்து செல்வது மற்றும் ஜன்னல்களிலிருந்து அந்த இயற்கையான சூழலைக் காண்பது நிச்சயம் ஒரு சிறந்த காட்சி அனுபவமாகும்.

Tags: indian railwaysRailway Minister Ashwini VaishnavTrain travelthird largest railway system
ShareTweetSendShare
Previous Post

நடிப்பின் பிதாமகன் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது – சிறப்பு கட்டுரை!

Next Post

செங்கடலில் அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies