தமிழகத்தின் கல்வி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர் என அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கல்வி, தொழில்துறை, விவசாயம், சமூக மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் தொலை நோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி, புதிய தமிழகத்தை உருவாக்கிய சிற்பி, கர்மவீரர் காமராஜர் அவர்களது நினைவுதினம் இன்று.
தமது ஆட்சிக் காலத்தில்,தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கும், பல அரசு பொது நிறுவனங்களை உருவாக்கி, தொழில் புரட்சிக்கும் வித்திட்ட மேதை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கியவர்.
இன்றும் தமிழகத்தில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குபவை, கர்மவீரர் கட்டிய அணைகள்தான். தமது நல்லாட்சியால் தமிழக மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய பாரத ரத்னா, பெருந்தலைவர் காமராஜர் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.