எளிமை, பணிவு, உறுதி மூலம் தேசத்தை ஊக்கப்படுத்தியவர் லால் பகதூர் சாஸ்திரி என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில், தனது எளிமை, பணிவு மற்றும் உறுதியால் தேசத்தை ஊக்கப்படுத்திய முன்மாதிரியான தலைவரை நாம் நினைவுகூருகிறோம்.
‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற அவரது அழைப்பு தொடர்ந்து எதிரொலிக்கிறது/ வலிமையான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கி உழைப்பதன் மூலம் அவரது பாரம்பரியத்தை போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.