மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வானில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பவுதான் புத்ருக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. புதர்கள் சூழ்ந்த இடத்தில் விழுந்த ஹெலிகாப்டர் உடனடியாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.