9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா - களைகட்டிய கொலு பொம்மை விற்பனை - சிறப்பு கட்டுரை!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு………

தமிழ் வருடத்தின் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். அதில் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு கூடுதல் பிரசித்தி பெற்றதாகும்.

நவராத்திரியை கொலு பண்டிகை என்று அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச் சிறப்பு. உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும்.

வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் தூய்மைப்படுத்தி மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும், இடத்திற்கும் ஏற்றபடி உருவாக்கி கொலுவானது அமைக்கப்படுகிறது.

முதல் படியின் நடுவில் கலசத்தை வைத்து பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். அப்போது முதல், நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர். அவை செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்பதே நம்பிக்கையாக உள்ளது.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரியானது நாளை தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ளன.

வீடுகள் தோறும் இந்த நவராத்திரி கொண்டாட்டத்திற்கான கொலு பொம்மை விற்பனை நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. அந்த வகையில், சென்னையில் குறலகம், அண்ணாசாலை பூம்புகார் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் , காதி கிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் கொலு பொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை களைகட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது புது, புது பொம்மைகள் விற்பனைக்கு வருவதாகவும், அதை வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெரிவிக்கும் விற்பனையாளர்கள், சுமாா் 7 அடி வரையிலான உயரம் கொண்ட பொம்மைகளையும் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

கொலு வைப்பதற்காக தங்களின் வசதிக்கேற்ப பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பெண்கள், இதனால் தங்களின் வாழ்வில் வளம் பெறுவதாக தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…

Tags: ChennaitamilnaduNavratri FestivalKolu dolls sales
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீசார் – டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு!

Next Post

IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் – சிறப்பு கட்டுரை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies