9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா - களைகட்டிய கொலு பொம்மை விற்பனை - சிறப்பு கட்டுரை!
Sep 18, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு………

தமிழ் வருடத்தின் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். அதில் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு கூடுதல் பிரசித்தி பெற்றதாகும்.

நவராத்திரியை கொலு பண்டிகை என்று அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச் சிறப்பு. உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும்.

வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் தூய்மைப்படுத்தி மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும், இடத்திற்கும் ஏற்றபடி உருவாக்கி கொலுவானது அமைக்கப்படுகிறது.

முதல் படியின் நடுவில் கலசத்தை வைத்து பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். அப்போது முதல், நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர். அவை செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்பதே நம்பிக்கையாக உள்ளது.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரியானது நாளை தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ளன.

வீடுகள் தோறும் இந்த நவராத்திரி கொண்டாட்டத்திற்கான கொலு பொம்மை விற்பனை நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. அந்த வகையில், சென்னையில் குறலகம், அண்ணாசாலை பூம்புகார் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் , காதி கிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் கொலு பொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை களைகட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது புது, புது பொம்மைகள் விற்பனைக்கு வருவதாகவும், அதை வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெரிவிக்கும் விற்பனையாளர்கள், சுமாா் 7 அடி வரையிலான உயரம் கொண்ட பொம்மைகளையும் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

கொலு வைப்பதற்காக தங்களின் வசதிக்கேற்ப பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பெண்கள், இதனால் தங்களின் வாழ்வில் வளம் பெறுவதாக தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…

Tags: Navratri FestivalKolu dolls salesChennaitamilnadu
Share
Tweet
SendShare
Previous Post

நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீசார் – டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு!

Next Post

IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் – சிறப்பு கட்டுரை!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies