9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா - களைகட்டிய கொலு பொம்மை விற்பனை - சிறப்பு கட்டுரை!
Nov 12, 2025, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு………

தமிழ் வருடத்தின் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். அதில் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு கூடுதல் பிரசித்தி பெற்றதாகும்.

நவராத்திரியை கொலு பண்டிகை என்று அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச் சிறப்பு. உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும்.

வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் தூய்மைப்படுத்தி மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும், இடத்திற்கும் ஏற்றபடி உருவாக்கி கொலுவானது அமைக்கப்படுகிறது.

முதல் படியின் நடுவில் கலசத்தை வைத்து பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். அப்போது முதல், நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர். அவை செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்பதே நம்பிக்கையாக உள்ளது.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரியானது நாளை தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ளன.

வீடுகள் தோறும் இந்த நவராத்திரி கொண்டாட்டத்திற்கான கொலு பொம்மை விற்பனை நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. அந்த வகையில், சென்னையில் குறலகம், அண்ணாசாலை பூம்புகார் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் , காதி கிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் கொலு பொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை களைகட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது புது, புது பொம்மைகள் விற்பனைக்கு வருவதாகவும், அதை வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெரிவிக்கும் விற்பனையாளர்கள், சுமாா் 7 அடி வரையிலான உயரம் கொண்ட பொம்மைகளையும் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

கொலு வைப்பதற்காக தங்களின் வசதிக்கேற்ப பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பெண்கள், இதனால் தங்களின் வாழ்வில் வளம் பெறுவதாக தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…

Tags: Navratri FestivalKolu dolls salesChennaitamilnadu
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீசார் – டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு!

Next Post

IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் – சிறப்பு கட்டுரை!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies