இந்தியாவில் ரயில் விபத்துகள் வருடத்திற்கு 40 என்ற அளவில் குறைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் பேட்டியளித்த அவர், எந்தவொரு ரயில் விபத்துக்கும் மூல காரணம் என்ன என்பதை கண்டறிய முயற்சிப்பதாக கூறினார்.
அதன் மூலமே கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 171 ரயில் விபத்துகள் நடைபெற்றதாகவும், தற்போது ஆண்டுக்கு 40 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.