சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான காவலர்கள் இல்லையா என உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
திமுக அரசு போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள அவர், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தமிழ்நாடு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.