மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அது குறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர், பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.