தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் டி.குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு மாநாட்டிற்கு வரவேண்டும் என அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ள குருமூர்த்தி. இதற்காக விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தவறினால் இந்து மக்கள் கட்சி சார்பில் அவரது இல்லம் முற்றுகையிடப்படும் என குருமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.