தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்டவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜாவுடன் பின்னர் ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.
அப்போது, தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய மோதல் தொடர்வதாகவும், பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் ஆயுதங்களை எடுத்து செல்லும் அவலநிலை உள்ளதாக தெரிவித்தார்.
ஹிந்துக்கள் மீதான அடக்குமுறை தொடர்வதாகவும் பொய்யான வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் அவர் சாடினார்
தமிழக அரசு சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என்றும் ஹெச்.ராஜா குற்றம்சட்டினார்.