ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடத்தை, இஸ்ரேல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் என்பதை மத்திய அரசு நிலை நிறுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடம் இடம்பெற்றிருந்தது.
இதனை அபிஜித் சாவ்டா என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவை சீண்டும் வகையில் வரைபடத்தை பதிவிட்டுள்ளதாக இஸ்ரேலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் தூதர் ருவன் அசார், தவறான வரைபடம் இடம்பெற்றதை ஒப்புக் கொண்டதுடன், அது உடனடியாக அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இணையதள ஆசிரியரின் தவறாலேயே இச்செயல் நடந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்