கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு சுமார் 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய படகு வழங்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கேரள போலீசாருக்கு தமிழக அரசால் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், காவலர்கள் அணைக்கு சென்றுவர ஏதுவாக கேரள உள்துறை சார்பில் புதிய படகு வாங்கப்பட்டது. இதை தொடர்ந்து இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரதீப் படகை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.