வான் சாகச நிகழ்ச்சியில் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் அணிவகுத்துச் சென்றதை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படை சார்பில் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
லட்சக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட வான் சாகச நிகழ்ச்சிகள் அங்கு கூடியிருந்தவர்களை பிரமிக்கச் செய்தன.
குறிப்பாக அதிநவீன சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடி மற்றும் விமானப் படையின் கொடிகளை ஏந்தியவாறு ‘ஒய்’ வடிவில் அணிவகுத்துச் சென்ற காட்சியைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சிக் களிப்பில் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.