வளர்ந்த இந்தியா இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக தான் பொறுப்பேற்றதாக கூறியுள்ளார்.
ஒரு அரசாங்கத்தின் தலைவராக தான் பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
தன்னைப் போன்ற ஒரு பணிவான காரியகர்த்தாவை மாநில நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்தது பாஜக என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வளர்ந்த இந்தியா என்ற இலக்கு நனவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் என்றும், அதற்காக இன்னும் துடிப்புடன் பணியாற்றுவேன் எனவும் பதிவிட்டுள்ளார்.