ஜெய்சங்கர் பயணம் எதிரொலி - இலங்கைக்கு கூடுதல் சலுகை - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜெய்சங்கர் பயணம் எதிரொலி – இலங்கைக்கு கூடுதல் சலுகை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைக்கு வழங்கப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை மானியமாக மாற்றவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை 61.5 மில்லியன் டாலருக்கு நவீனமயமாக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவரான அநுரகுமார திஸ்நாயக இலங்கை அதிபராக கடந்த மாதம் 23 ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், அநுரகுமார திஸ்நாயக இலங்கை அதிபராக பதவியேற்ற, 15 நாட்களுக்குள் முதல் வெளிநாட்டு பிரமுகராக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரைச் சந்தித்துள்ளார். இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாக கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மீன்பிடி, பாதுகாப்பு, சுற்றுலா, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடியதாக இலங்கை அதிபரும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கேசன் துறைமுகத்தை நவீனமயமாக்கும் வகையில் 61.5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது என்றும், ஏற்கெனவே இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 7 கடன்களை மானியமாக மாற்ற இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ரயில்வே துறைக்கு 22 டீசல் இன்ஜின்களைப் பரிசாக கொடுக்கவும் இந்தியா முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சுமார் 104 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கேசன் துறைமுகம், சுனாமியாலும், ‘நிஷா’ சூறாவளியாலும் கடுமையாக சேதமடைந்தது.

காங்கேசன் துறைமுகத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. நீண்ட காலமாகவே, இலங்கை துறைமுகங்களை சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக, இந்தியா, இலங்கையிடம் கேள்வி எழுப்பியது. இதன் விளைவாக, முந்தைய ரணில் விக்கிரமசிங்கே அரசு, நாட்டின் துறைமுகங்களை அனைத்து நாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்துவதற்கு ஓராண்டு தடை விதித்தது. இந்த தடை, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

​தேசிய பாதுகாப்பு குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அதே நேரத்தில், 50 தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எரிசக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் எல்என்ஜி விநியோகம், சூரிய மின்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவினை அளித்து வரும் நிலையில், இலங்கை அதிபருடனான ஜெய்சங்கரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: Indiasrilankaforeign minister s jaishankarjaishakar srilanka visit
ShareTweetSendShare
Previous Post

மோதிப்பார்…நாங்க ரெடி…ஏவுகணைகளை சிதறடிக்கும் இந்தியாவின் “அயர்ன் டோம்” – சிறப்பு கட்டுரை!

Next Post

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies