மோதிப்பார்...நாங்க ரெடி...ஏவுகணைகளை சிதறடிக்கும் இந்தியாவின் "அயர்ன் டோம்" - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோதிப்பார்…நாங்க ரெடி…ஏவுகணைகளை சிதறடிக்கும் இந்தியாவின் “அயர்ன் டோம்” – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 8, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் ஏவிய பலநூறு ஏவுகணைகளை அயர்ன் டோம் உள்ளிட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இஸ்ரேல் போன்று எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிடம் உள்ளதா? ஏவுகணை சவால்களை எதிர்கொள்ள இந்தியா எந்த அளவு தயாராக உள்ளது? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இஸ்ரேல் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும், எதிரிகளிடமிருந்து அதன் சொந்த புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இஸ்ரேலின் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல், அனைத்து நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூரத்திலிருந்து, பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே பறக்கும் ஏவுகணைகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அயர்ன் டோம் மிகவும் பிரபலமானதாகும்.

அயர்ன் டோம் தவிர, டேவிட் ஸ்லிங், அரோ 2 மற்றும் 3, மற்றும் அயர்ன் பீம் ஆகிய பாதுகாப்பு அமைப்புக்களும் இஸ்ரேலிடம் உள்ளது.

புவி சார் அரசியல் சூழலில், , இந்தியாவும் அதன் அண்டை நாடுகளிடமிருந்து பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக சீனாவும்,பாகிஸ்தானும் உள்ளன. இரண்டு நாடுகளும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல மேம்பட்ட ஏவுகணை திறன்களைக் கொண்டுள்ளன.

ராணுவத்தை நவீனமயமாக்கி வரும் சீனா, வலுவான ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்கி வைத்துள்ளது. அதன் மூலம், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள தென் சீனக் கடலின் கரையோர மாநிலங்களை அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

DF-21 மற்றும் DF-26 ஏவுகணைகள் சீனாவிடம் உள்ளன. இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் (IRBMs) இந்திய எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை ஆகும். இதன் மூலம், இந்திய கடற்படை தளங்களைக் குறிவைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கக் கூடிய பாபர் க்ரூஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் உள்ளன. இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை வீசக்கூடிய திறன் கொண்டவை ஆகும்.

மேலும், நடுத்தர முதல் நீண்ட தூரம் வரை சென்று தாக்கும் கௌரி மற்றும் ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன. இதனால், இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் நாடெங்கும் உள்ள ராணுவ தளங்களையும் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் மேற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், சீனாவுடன் நட்புறவு பேணுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மட்டும் இல்லாமல், வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்தியா முதலீடு செய்து வருகிறது.

பிருத்வி ஏர் டிஃபென்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ் ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளாகும். வெவ்வேறு உயரங்களில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க இவை உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆகாஷ் ஏவுகணை அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்வழி இலக்குகளை இடைமறித்து தாக்கக்கூடியதாகும். இந்த ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, ஒரு தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்பாகும்.

அண்மையில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் வான்வழி தாக்குதலுக்கு எதிராக S-400 வான்வழி பாதுகாப்பை ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. சுமார் 400 கிலோமீட்டர் வரையிலான 30 கிலோமீட்டர் உயரத்தில் வரும் ஏவுகணைகளை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், S-400 வான்வழி பாதுகாப்பு , ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

2021ம் ஆண்டில், பராக்-8 என்ற வான்-ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்திய விமானப்படை உருவாக்கியது. Barak-8, 70 கிலோமீட்டர் தூரம் வரை, எதிரியின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஆகியவற்றைத் தடுக்கும். இதனை,இந்திய விமானப் படை பாதுகாப்பில் ஒரு “கேம் சேஞ்சர்” என்று தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து வாங்கிய நவீன பாதுகாப்பு அமைப்புகளுடன் இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலைப் போலவே, இந்தியாவும் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புக்களைக் கொண்டுள்ளது. வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு வரம்புகள் மற்றும் உயரங்களை உள்ளடக்கியதாக இந்தியாவும் வைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் , இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

Tags: Iranmissile attackBeam defense systems.
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலம்!

Next Post

ஜெய்சங்கர் பயணம் எதிரொலி – இலங்கைக்கு கூடுதல் சலுகை – சிறப்பு கட்டுரை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies