ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள, மாநில பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பாரதப் பிரதமர்நரேந்திர மோடியின் திறன் மிகுந்த தலைமையின் கீழ் பாரத தேசம் அடைந்துள்ள வளர்ச்சியும், கடந்த பத்து ஆண்டு காலமாக ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சியில் நமது கட்சி கொண்டிருந்த ஈடுபாடுமே, மக்கள் தொடர்ச்சியாக நமக்கு அளித்துள்ள வெற்றிக்கு சான்றாகியுள்ளது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.