ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரி ஷெல்ஜா குற்றம்சாட்டினார்.
ஹரியானாவில் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸின் திட்டம் கானல் நீரானது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கு ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் பணியை அக்கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால், மீண்டும் முதலமைச்சராகும் கனவில் பூபிந்தர் சிங் ஹூடா இருந்தார். இந்த நிலையில், அக்கட்சியின் தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி ஷெல்ஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் கட்சித் தலைமையை மாற்றுவது தொடர்பாக மேலிடம் சுயபரிசோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர், தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.