தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோயில் மலைக்குன்றுகளை தகர்த்து சரள் மண் எடுத்த விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, அங்குள்ள மலைக் குன்றுகளை தகர்த்து சரள் மண் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. சரள் மண் எடுத்தது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.