குஜராத் மாநிலம் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த லோத்தல் துறைமுகம், நாட்டின் தொன்மையை பறைசாற்றுகிறது.
இங்கு தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேம்பாட்டு பணியானது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், இதற்கான நிதி தன்னார்வலர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அமைச்சரவை தெரிவித்தது.
முதல்கட்டத் திட்டத்தின் கீழ், கலங்கரை விளக்க அருங்காட்சியகத்துக்கான நிதியை கலங்கரை விளக்க இயக்குநரகம் விடுவிக்கும் என்றும்,
இதைக் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 7 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவு தகவல் வெளியாகியுள்ளது.