குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுக வெள்ளி விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல் தலையை அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், அதானி துறைமுக கழக மேலாண்மை இயக்குநர் கரண் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக குஜராத் அரசுக்கு தொழிலதிபர் கெளதம் அதானி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்தார். நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறைமுகமாக முந்தரா, கடந்த 1998-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.