சேலத்தில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நகர்ப்புற பகுதி மற்றும் ஐந்து ரோடு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டிதீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் கழிவு நீருடன் கலந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.