தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல் தெரிவித்தார்.
வயோதிகம் சார்ந்த உடல்நலக் குறைவால் ரத்தன் டாடா மும்பையில் மரணமடைந்தார். இதையொட்டி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வெளியிட்ட இரங்கல் செய்தியில், தாம் கடந்த பிப்ரவரியில் பாரத ரத்னா விருது பெற்றபோது தன்னை ரத்தன் டாடா தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதுதான் அவருடன் கடைசியாக பேசியது என்றும் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடாவின் அரவணைப்பும், தாராள குணமும், இரக்கமும் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் இரங்கல் குறிப்பில் எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார்.