அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8 ஆயிரத்து 400 ரூபாய், அதிகபட்சம் 16 ஆயிரத்து 800 ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது என்றும், தீபாவளி போனஸ் அறிவிப்பால் 2 லட்சத்து 75 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சி,டி பிரிவு தொழிலாளர்களுக்கு 369 கோடி ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.