கொடைக்கானலில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய புவியியல் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல் கிளாவரை மேல்பகுதியில் பல மீட்டர் தொலைவிற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து மத்திய புவியியல் துறை வல்லுநர்கள், கிளாவரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நிலப்பிளவின் காரணமாக ஆபத்து ஏதும் இல்லை என்றும், அப்பகுதியில் நில அதிர்வு ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்தது.
அதேசமயம், தண்ணீர் பூமிக்குள்ளே செல்வதால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறிய வல்லுநர்கள், அதை முறைப்படுத்த வேண்டும் என ஆய்வறிக்கையில் தெரிவித்தனர்.