சேவை வரி தொடர்பான ஜிஎஸ்டி நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதாகக் கூறி, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜுக்கு ஜிஎஸ்டி இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம்தான் முறையிட முடியும் என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் ஆட்சேபத்தை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்குமாறு ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.