ஒரே நாளில் நாகையைச் சேர்ந்த 18 மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கோபால் என்பவருக்கு சொந்தமான படகில், மொத்தம் 18 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது, திடீரென வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிலோ மீன்பிடி வலைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட உபகரணங்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.
காயமடைந்த மீனவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.