திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 680 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் யாரும் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்படவில்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளரிடம் பேசிய அவர்,
ஜம்மு காஷ்மீர் 29 சட்டமன்ற தொகுதியில், வாக்கு சதவிகிதத்தில் முதல் இடத்தில் பாஜக உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370ஐ ரத்து – ராணுவத்தினர் மீது கல் எறியும் சம்பவங்கள் இதுவரை நிகழவில்லை எனத் தெரிவித்தார்.
மக்கள் அமைதியை விரும்புவதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் எதிர்கட்சிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் ஆட்சியில் 680 மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் மீனவர்கள் கொலை செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இந்து சமுதாயத்தை சாதியை கூறி பிரித்து நாட்டை சிதைத்துவிட வேண்டுமென மனப்பால் குடித்த காங்கிரஸ் கட்சிக்கு ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்