மதுரையில் இன்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ககை முகாமில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று உறுப்பினர் சேர்கை பணியில் ஈடுபட்டார்.
அவர் விடுத்துள்ள பதிவில், “மதுரை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நமது பாரதிய ஜனதா கட்சி சொந்தங்களோடு இணைந்து, சௌராஸ்ட்ராபுரம் பகுதி பூத் எண் 253-ல் உறுப்பினர் சேர்க்கை பணிகள் மேற்கொண்டோம்.
கடந்த பத்து ஆண்டுகளில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்கிற உயர்ந்த குறிக்கோளுடன், தேசத்தின் வளர்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி கொண்டிருக்கும் முனைப்புகளையும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தேவைக்கேற்ப முன்னெடுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றியும் பொதுமக்களிடம் விளக்கினோம்.
அதன் அடிப்படையில், நமது கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டாவுக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான அவரது அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது. இந்த நாள் அவருக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும், தொடர்ச்சியான ஆசீர்வாதங்களையும் தரட்டும் என என்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.