போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீஸார் அண்மையில் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தனர். இதேபோல டெல்லியிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப்பொருட்கள் சிக்கின. அடுத்தடுத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருளுக்கு எதிராக எவ்வித தொய்வுமின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், நாட்டை போதைப் புழக்கத்திலிருந்து விடுவிக்க மோடி அரசு கடமைப்பட்டிருப்பதாக உறுதியளித்தார்.