முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்ப பெறப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு கேரளாவைச் சேர்ந்த காக்கும் படை என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழகத்திற்கு உத்தரவிட கோரியும் வலியுறுத்தப்பட்டிருந்து. ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை 3 மாதங்களுக்கு முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்கவும், ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் அதே நீர்மட்டத்தை தொடர்ந்து பராமரிக்கவும் தமிழகத்திற்கு ஆணையிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது உத்தரவிட்டது.