தொடரும் மழை - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அண்ணாமலை அறிவுறுத்தல்!
May 30, 2025, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொடரும் மழை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அண்ணாமலை அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 15, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மழை தொடரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, கடந்த ஆண்டுகளில், வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்தவரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று. தமிழக அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% அளவு நிறைவு பெற்றிருப்பதாக, அமைச்சர்களும், சென்னை மாநகராட்சி மேயர் அவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வருவதால், கடந்த ஆண்டுகளை நினைவில் கொண்டு, தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் செல்லும்போது, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

கனமழை இன்னும் சில நாட்களுக்குத் தொடர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், மின்சாரம் தொடர்பான பொருள்களைக் கையாளும்போதும், நீர்நிலைகளிலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். பருவமழையைப் பாதிப்பின்றி எதிர்கொள்வோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: bjpannamalaiheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological centerrain warningtamilnadu bjp presdient
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கனமழை – பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை மூடல்!

Next Post

பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தர் அப்துல் கலாமின் புகழை போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

Related News

கட்டண உயர்வை தெரியப்படுத்த ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்பாட்டம்!

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் – சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை – 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு!

ப்ரீ புக்கிங்கில் ரூ. 1 கோடி வசூல் செய்த தக் லைஃப் !

அஜித்தின் அடுத்த படமான ஏகே 64-ல் இரு நடிகைகள்?

சுதந்திரமாக உலா வரும் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி!

Load More

அண்மைச் செய்திகள்

மொரிஷியஸில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா கோலாகல கொண்டாட்டம்!

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம்!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் – வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

அவசரமாக திறக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – பயன்பாட்டுக்கு வராதது ஏன் என பொதுமக்கள் கேள்வி!

ஐபிஎல் தொடர் – இறுதிப்போட்டியில் பெங்களூரு!

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் – இந்தியா உறுதி!

பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது – ஒப்புக்கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்!

ரூ. 1200 கோடி மதிப்பில் பாட்னா விமான நிலைய புதிய முனையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

மதுரையில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் – விழாவை புறக்கணித்த மேயர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies