கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் என்ற செய்தி வந்துள்ளது எனவும்,
சென்னைக்கு மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருள்கள் என அனைத்தும் தாமதமில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் முக்கியமாக மலைப்பகுதிகள், தாழ்வான இடங்கள், குடிசை, மருத்துவமனை மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக மழை வெள்ளம் ஏற்படும்போது 95 சதவீதம் வேலைகள் நிறைவுபெற்று விட்டதாகச் கூறும் திமுக அரசு, இன்றைக்கு வரைக்கும் எந்தவொரு வேலையையும் முடித்ததாக தெரியவில்லை என கூறியுள்ளார்.
எனவே, கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.