தொடர் மழை எதிரொலியாக 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழையால், வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், ஒரு சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான ரயில், மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் – ஏற்காடு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.