தமிழ் மொழிக்கு கண்ணதாசன் ஆற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் மொழியின் தன்னிகரில்லா கவிஞருமான, கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும், தமிழில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இதழ்களின் இதழாசிரியராகவும் செயல்பட்டவவர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியவர், அரசியலிலும் தனித்தன்மையுடைய கருத்துகளுடன் இயங்கினார்.
தனது பாடல்கள் வழி சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் புத்துணர்வு அளித்து, காலத்தால் அழியாத பாடல்கள் இயற்றிய கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவு தினமான இன்று, தமிழ் மொழிக்கு அவராற்றிய அரும்பணியை நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.