உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை, சந்திரசூட் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், அடுத்த மாதம் 10 ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார்.
இதனையடுத்து விதிகளின்படி அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என மத்திய அரசு, சந்திரசூட்டின் பரிந்துரையை கோரியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.