ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி நகராட்சி அதிகாரிகளிடம், மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் முறையிட்டனர்.
புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், வாரச் சந்தைக்குள் கிடங்கு போல் கொட்டி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரின் அறிவுறுத்தலை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்றனர்.
அப்போது அவர்களை மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் 16வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.