நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள மஞ்சணக்கொரை பகுதியில் உலாவரும் சிறுத்தையால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து உணவுதேடி வெளியேறும் குடியிருப்புகளில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் மஞ்சணக்கொரை கிராமத்தில், அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியில் சிறுத்தை உலா வரும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இதனால் மிகுந்த அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.