தேனி மாவட்டம் குள்ளப்புரம் அருகே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சங்கரமூர்த்திப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ், ரம்யா தம்பதியின் 10 வயது மகன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுவன், இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சிறுவனின் உயிரிழப்புக்கு சுகாதாரமற்ற குடிநீரே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பைப் லைன்கள், கழிவுநீர் வாய்க்கால்லில் பதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் இதற்கு முன்னதாக 22 சிறுவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.