தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாகன ஓட்டியால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீனிவாசா நகர் காலனியை சேர்ந்த ஆஞ்சநேயலு என்ற முதியவர் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது காரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தீபக் என்பவர் வேகமாக வந்துகொண்டிருந்தார். அப்போது தீபக்கிடம் முதியவர் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தீபக் முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆஞ்சநேயலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.