திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ஊராட்சியில் மழையின் போது தேங்கிய தண்ணீர் 3 நாட்களாகியும் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கனமழை காரணமாக அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தண்ணீர் தேங்கியதாலும் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதாலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இப்பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணி முறையாக நடைபெறாததால் தண்ணீர் தேங்கியதாகவும், மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் மழை நின்றும் தேங்கிய தண்ணீர் வடியாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனதெரிவித்தனர்.