தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.
கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநாட்டு குழுவினர், தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில் பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல என தெரிவித்தார். மேலும், எதிர்பார்க்காமல் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றும், தவெகவை பார்த்துதான் மற்றவர்கள் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.