கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை 5 காட்டு யானைகள் கடந்து சென்றன.
நொகனூர் கிராமத்தின் அருகேயுள்ள ஆலஹள்ளி காட்டிலிருந்து, 5 காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதியை நோக்கி வனத்துறையினர் விரட்டினர்.
அப்போது தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையை யானைகள் கடந்து சென்றதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களை சிறுது நேரம் வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.
இதனையடுத்து யானைகள் கடந்து சென்றதை கண்ட வாகன ஓட்டிகள் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் கெண்டகானப்பள்ளி கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.