ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் ஆக்கிரமிப்பு எனக்கூறி ஆஞ்சநேயர் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கள்ளுக்கடைமேடு பகுதியில், ஆஞ்சநேயர் கோயில் ஒன்று மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. அப்போது, கோயிலை அளவீடு செய்தபோது 2 ஆயிரத்து 4 சதுர அடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதும் கோயிலின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கோயிலை இடிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு பின்னர் கோயிலை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பகுதிகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன.
அப்போது அசம்பாவிதம் எதுவும் நடைபெறாத வண்ணம் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.